புதன், 12 செப்டம்பர், 2018

பெய்யென பெய்யும் மழை

பெய்யென பெய்யும் மழை! 

                அருள்மிகு பர்வதாம்பிகை உடனுறை பரசுராமேஸ்வரர் ஆலயத்தில் அன்று ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு, எங்கள் உபயம். சிறுவயதில் என் அப்பா "தோடுடைய செல்வியனும்" பொன்னார் மேனியனே"பாடும் போது என்னையும் மீறி கண்ணீர் மல்க நின்றிருக்கின்றேன்.நினைவுகள் பின்னோக்கி அழைத்து செல்ல, தாத்தாவும் அப்பாவும் நின்றிருந்த அதே லிங்கத்தின் முன் நாங்கள் நின்றிருந்தோம். மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடக்க, வெளியில் இருக்கும் நந்திதேவர் மட்டுமிருக்க வெளியில் மழை ஆரம்பம் ஆனது. நல்ல மழை! . மழை விடட்டும் என பாலசுப்பிரமணிய ஐயர் சொல்ல, அனைவரும் முன்மண்டபத்தில் நின்றவாறு அவரவர் நினைவுகள் மழையாய் கரைந்து செல்வதை பார்த்திருந்தோம் . 

"ஏம்பா நந்திக்கு அபிஷேகம் பண்ணல?" என்றாள் கீர்த்தி. 

"இப்ப மழையாக இருக்குல்ல "என்றேன் நான். 

"மழையில நனையாததெல்லாம் ஒரு வாழ்க்கையாப்பா? "என்றவாறு என் விரல்களை பிடித்து மழைக்குள் இழுத்துச் சென்று மகிழ்ச்சியில் நனையவைத்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக